close
Choose your channels

என்.ஜி.கே படப்பிடிப்பு நிறைவு: சூர்யாவுக்கு நன்றி சொன்ன இயக்குனர்

Sunday, January 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வந்த 'என்.ஜி.கே. திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கிய 'என்.ஜி.கே' படத்தின் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் இடையிடையே படப்பிடிப்பு தாமதமானது. மேலும் இந்த படத்தின் அப்டேட் கூட வராததால் படக்குழுவினர் மீது சூர்யா ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்னர்

இந்த நிலையில் தற்போது 'என்.ஜி.கே' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாகவும், சூர்யாவுடன் பயணித்த இந்த பயணம் தனக்கு மிகச்சிறப்பான அனுபவமாக இருந்ததாகவும், அவருடைய நடிப்புத்திறமை மற்றும் அர்ப்பணிப்பு திறனை ஒவ்வொரு நாளும் தான் கண்டு ரசித்ததாகவும், அவருக்கு எங்களது குழுவினர்களின் மனமார்ந்த நன்றி என்றும் கூறியுள்ளார். இயக்குனரின் இந்த அப்டேட்டால் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

அரசியல்வாதியாக சூர்யா நடித்திருக்கும் இந்த படத்தில் ரகுல் ப்ரித்திசிங் மற்றும் சாய்பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் பாலாசிங், மன்சூர் அலிகான், சம்பத்ராஜ், சரத்குமார், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.