close
Choose your channels

இந்தியில் ரீமேக் ஆகும் மணிரத்னத்தின் காதல் காவியம்

Wednesday, November 18, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கத்தில் துல்கார் சல்மான், நித்யாமேனன் நடித்த 'ஓகே கண்மணி' என்ற காதல் காவியம், கடந்த ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகி வெற்றி நடைபோட்டது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெற்றி பெற்ற இந்த படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஆனால் இந்த படத்தை மணிரத்னம் இயக்கவில்லை என்றும், அவரிடம் உதவியாளராக இருந்த சாஹித் அலி (Shaad Ali) இயக்கவுள்ளதாகவும், துல்கார் சல்மான் வேடத்தில் ஆதித்யா ராய் கபூர் மற்றும் நித்யா மேனன் வேடத்தில் ஷாரதா கபூர் ஆகியோர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரகாஷ்ராஜ் உள்பட மற்ற வேடத்தில் நடிப்பவர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தது. இதற்காக சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மானை மணிரத்னம் சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.

மணிரத்னம் இயக்கிய 'தில்சே', குரு, ராவணன் ஆகிய படங்களில் சாஹித் அலி உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.