close
Choose your channels

மீண்டும் ஒரு வைல்ட்கார்ட் எண்ட்ரியா? என்ன நடக்குது பிக்பாஸில்?

Tuesday, November 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வைல்ட்கார்ட் போட்டியாளராக நடன இயக்குனர் அமீர் எண்ட்ரி ஆகியுள்ள நிலையில் மேலும் ஒரு வைல்ட்கார்ட் எண்ட்ரி வர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது என்பதும் இந்த நிகழ்ச்சியிலிருந்து நமீதா திடீரென வெளியேறி விட்டார் என்பதும் தெரிந்ததே. அதன்பின்னர் நாடியா சிங், சின்ன பொண்ணு, அபிஷேக், ஸ்ருதி, மதுமிதா மற்றும் இசைவாணி ஆகிய 6 பேர் குறைந்த வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பதும் இதனை அடுத்து இன்று வைல்ட்கார்ட் எண்ட்ரியான அமீருடன் சேர்த்து 12 பேர் தற்போது விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வெகு விரைவில் மீண்டும் ஒரு போட்டியாளர் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பர் சஞ்சீவ் அல்லது நடன இயக்குனர் சதீஷ் ஆகிய இருவரில் ஒருவர் வைல்ட்கார்ட் போட்டியாளராக வருவார் என்று கூறப்பட்ட நிலையில் இவர்களில் ஒருவர் வருவாரா? அல்லது வேறு போட்டியாளர் வருவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.