close
Choose your channels

'பிக்பாஸ் 3' நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 'நேர் கொண்ட பார்வை' நடிகை

Friday, June 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. அமிதாப்பின் 'பிங்க்' ரீமேக் படமான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் இந்த படமும் 'விஸ்வாசம்' படம் போல் மிகப்பெரிய வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகை ஒருவர் வரும் ஞாயிறு அன்று தொடங்கவுள்ள கமல்ஹாசனின் 'பிக்பாஸ் 3' நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது

'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தில் வித்யாபாலன், ஷாரதா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா தரங், அபிராமி வெங்கடாச்சலம் ஆகிய நடிகைகள் நடித்துள்ளனர். இதில் வித்யாபாலன், பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை. எனவே அவரை தவிர மீதி உள்ளவர்களில் யார் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர் என்பதை வரும் ஞாயிறு வரை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.