close
Choose your channels

உலகின் மிகச்சிறந்த CM விஜய் என டிரம்ப் டுவீட் செய்வார்: பார்த்திபன்

Sunday, August 20, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்துள்ள 'மெர்சல்' படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது வெகுபிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதல் நபராக நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் பேசினார்.

அவர் பேசியதாவது: ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைந்தால் என்ன நடக்கும் என்பது எனக்கு தெரியாது. ஆனால் விஜய்யும் விஜய் ரசிகர்களும் சேர்ந்தால் நிச்சயம் மாஸ் தான். பொதுவாக 25ம் 25ம் இணைந்தால் 50தான் வரும். ஆனால் விஜய்யின் 25ம், ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் 25ம் இணைந்து தேனாண்டாள் என்ற 100ஆக மாறியுள்ளது. ராமநாராயணன் அவர்கள் தயாரித்த 99 படங்களின் மொத்த பட்ஜெட்டை விட அதிகமாக 100வது படத்தின் பட்ஜெட்டாக தயாரிக்க அவரது வாரிசு முரளி அவர்களால் மட்டுமே முடியும்.

சமீபத்தில் பத்திரிகையாளர் குறித்த ஒரு பிரச்சனை வந்தபோது அன்று மாலையே பெண்ணியத்தை சப்போர்ட் செய்து கண்ணியமாக ஒரு மெசேஜ் செய்தார் விஜய். அங்கேதான் அவரை நான் ஹீரோவாக பார்க்கின்றேன்.

சமீபத்தில் டுவிட்டரில் முதல்முறையாக எமோஜி 'மெர்சல்' படத்திற்காக கிடைத்தது. மிகவிரைவில் அதே டுவிட்டரில் டிரம்ப் ஒரு டூவிட் செய்வார். உலகின் மிகச்சிறந்த CM விஜய் தான் என்று அவர் டுவீட் செய்வார். CM என்றால் கலெக்ஷன் மன்னன் என்று பொருள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். கடைசியாக தமிழகத்தை தமிழனோ, தெலுங்கரோ, மலையாளியோ யார் வேண்டுமானாலும் ஆட்சி செய்து கொள்ளுங்கள். ஆனால் ஆளப்போறது தலை சிறந்த ஒரு மனிதனாக இருக்க வேண்டும். வாழப்போறது விவசாயியாக இருக்க வேண்டும்' இவ்வாறு பார்த்திபன் பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.