close
Choose your channels

சித்ரா தற்கொலை வழக்கில் சிக்கிய சிசிடிவி காட்சிகள்: விசாரணையில் திருப்பம் ஏற்படுமா?

Thursday, December 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று அதிகாலை தான் தங்கியிருந்த சொகுசு அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சின்னத் திரை உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் குறித்து போலீசார் தற்போது விசாரணை செய்து வருகின்றனர்

இந்த நிலையில் நேற்று இரவு சித்ரா சொகுசு அறையில் இருந்து படப்பிடிப்புக்கு சென்ற பின்னர், அவர் மீண்டும் படப்பிடிப்பில் இருந்து அறைக்கு வந்தது வரையிலான சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சிசிடிவி காட்சியில் சித்ராவை பார்க்க அவருடைய கணவர் ஹேமந்த் மட்டுமின்றி வேறு யார் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்பது குறித்து தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் சித்ராவை ஹேமந்த் மட்டும்தான் பார்க்க வந்தாரா? அல்லது படக்குழுவினர் மற்றும் நடிகர் நடிகைகள் யாராவது வந்தார்களா? வேறு வெளியாட்கள் யாராவது வந்தார்களா? என்பது குறித்து இந்த சிசிடிவி காட்சியின் முழுமையான ஆய்வுக்கு பின்னரே தெரியவரும்

சித்ரா தற்கொலை வழக்கில் இதுவரை எந்தவித ஆதாரங்களும் சிக்காத நிலையில் இந்த சிசிடிவி காட்சியில் ஏதேனும் ஆதாரங்கள் சிக்கி, இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் தடயவியல் அறிக்கையும் வந்துள்ளதாகவும் அதனடிப்படையிலும் விசாரணை நடந்து வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.