close
Choose your channels

'பீஸ்ட்' படப்பிடிப்பை முடித்துவிட்டாரா பூஜா ஹெக்டே: அவரே அளித்த பதில்

Thursday, September 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com


தளபதி விஜய் நடித்து வரும் ’பீஸ்ட்’ படத்தின் மூன்று கட்ட படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் நேற்று முதல் சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் நான்காம் கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக விரைவில் படக்குழுவினர் டெல்லி செல்ல இருப்பதாகவும் அதனை அடுத்து ரஷ்யா செல்ல இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது

இந்த நிலையில் ஏற்கனவே இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் விஜய் உடன் பூஜா ஹெக்டே கலந்து கொண்டார் என்பதும், விஜய், பூஜா ஹெக்டே சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்புகள் நடந்தது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் பீஸ்ட் படத்தில் இன்னும் ஒரே ஒரு ஷெட்யூலில் மட்டுமே தான் நடிக்க வேண்டிய காட்சிகள் இருப்பதாகவும், அதையும் வெகு சீக்கிரம் முடித்து விடுவேன் என்றும் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு இன்ஸ்டாவில் பூஜா ஹெக்டே பதில் கூறியுள்ளார். மேலும் விஜய் அவர்களுடன் இணைந்து நடித்தது தனக்கு மிகவும் பெருமையாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் பூஜா ஹெக்டே சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து விடும் என்று கூறப்படுகிறது.

தளபதி விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துவரும் இந்த படத்தில் செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.