close
Choose your channels

ஆட்டோ டிரைவர்களுக்கு உதவிய சூர்யா-கார்த்தி பட ஹீரோயின்

Sunday, May 24, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்த ’மாஸ் என்ற மாசிலாமணி’ கார்த்தி நடித்த ’சகுனி’ உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் பல தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ப்ரணிதா சுபாஷ். இவர் இந்த கொரோனா விடுமுறையில் தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது கொரோனா குறித்த விழிப்புணர்வு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் இவர் சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் சிலருக்கு சானிடைசர் மற்றும் மாஸ்குகள் உட்பட ஒரு சில பொருட்களை வழங்கி உதவி செய்துள்ளார். ஆட்டோ டிரைவர்ககளுக்கு தேவையான மாஸ்குகள், சானிடைசர் ஆகியவற்றை வழங்கியதோடு அவர்களுடைய ஆட்டோக்களுக்கு கிருமிநாசினி தெளிக்கவும் உதவி செய்துள்ளார்.

ஆட்டோ டிரைவர்களுக்கு நடிகை ப்ரணிதா உதவியுள்ளது குறித்து அப்பகுதி ஆட்டோ டிரைவர்கள் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்த தகவல் சமூக வலைதளங்களில் வீடியோக்களுடன் சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து நடிகை ப்ரணிதாவுக்கு நெட்டிசன்கள் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ப்ரணிதா சுபாஷ் தற்போது இந்தியில் இரண்டு படங்களிலும் கன்னடத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.