close
Choose your channels

'ஜெய்பீம்' பார்வதிக்கு வீடு கட்டித்தரும் முடிவை திடீரென மாற்றிய ராகவா லாரன்ஸ்: என்ன காரணம்?

Saturday, December 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் உள்ள ராசாக்கண்ணு கேரக்டர் உண்மையாகவே வாழ்ந்தவர் என்பதும் அவரது மனைவி பார்வதி அம்மாள் இன்றும் உயிரோடு வாழ்ந்து வருகிறார் என்பதும் செய்திகள் வெளியானது. அதனை அடுத்து பார்வதி அம்மாளுக்கு உதவிகள் குவிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நடிகர் மற்றும் இயக்குநர் ராகவா லாரன்ஸ் அவர்கள் பார்வதி அம்மாளை நேரில் சந்தித்து அவருக்கு வீடு கட்டி தருவதாக வாக்குறுதி தந்தார். இந்த நிலையில் தற்போது அதில் ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

’ஜெய்பீம்’ படத்தின்‌ உண்மைக்கதைநாயகனான ராசாக்கண்ணுவின்‌ மனைவி பார்வதி அம்மாள்‌ வறுமை நிலையில்‌ வாழ்ந்து வருவதை அறிந்த பிறகு, பார்வதி அம்மாவுக்கு எனது செலவில்‌ வீடு கட்டிக்‌ கொடுப்பதாக உறுதியளித்திருந்தேன்‌.

பார்வதி அம்மாவை நேரில்‌ சந்தித்தும்‌ அவரிடம்‌ இதுபற்றி தெரிவித்தேன்‌. அரியலூர்‌ மாவட்டம்‌ விக்கிரமங்கலம்‌ அருகில்‌ உள்ள, கீழ நத்தம்‌ கிராமத்தில்‌ பார்வதி அம்மாளின்‌ மகளுக்கு நிலம்‌ உள்ளது என்றும்‌ அந்த இடத்தில்‌ வீடு கட்டித்தரும்படி கேட்டுக்கொண்டனர்‌.

அதன்படி சில நாட்களுக்குமுன்‌ கீழநத்தம்‌ கிராமத்துக்கே சென்று வீடு கட்டுவதற்கான நிலத்தை பார்வையிட்டு வந்தோம்‌. விரைவில்‌ வீடுகட்டும்‌ பணியைத்‌ தொடங்கும்‌ முயற்சியில்‌ இருந்தநிலையில்‌, பார்வதி அம்மாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில்‌ வீடு கட்டித்தர இருப்பதாக தொலைக்காட்சி செய்தி மூலம்‌ அறிந்து மகிழ்ச்சியடைந்தேன்‌.

பார்வதி அம்மாவின்‌ இன்றைய வறுமைநிலையை அறிந்து அவருக்கு வாழ்விடத்தை கட்டிக்கொடுக்க முன்வந்த தமிழ்நாடு முதலமைச்சர்‌ மாண்புமிகு மு.க.ஸ்டாலின்‌ அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியையும்‌ பாராட்டுக்களையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டித்தருவதற்காக நான்‌ ஒதுக்கிய 5 லட்சத்துடன்‌ மேலும்‌ 3 லட்சம்‌ சேர்த்து, பார்வதி அம்மாள்‌, அவருடைய மகள்‌, மற்றும்‌ அவருடைய இரண்டு மகன்கள்‌ ஆகியோருக்கு தலா இரண்டு லட்சங்களை வழங்க முடிவு செய்துள்ளேன்‌.

பார்வதி அம்மாவுக்கும்‌ அவருடைய குடும்பத்தினருக்கும்‌ நல்லது நடப்பதற்கு காரணமாக இருந்த ’ஜெய்பீம்’ படக்குழுவினருக்கும்‌, ’ஜெய்பீம்’ படத்தை தயாரித்த திரு.சூர்யா, திருமதி.ஜோதிகா, இயக்குநர்‌ திரு. த.செ. ஞானவேல்‌ அனைவரையும்‌ இத்தருணத்தில்‌ நன்றியோடு நினைவுகூர்வோம்‌.

இவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.