close
Choose your channels

'மீடூ' விவகாரம் குறித்து ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து

Saturday, October 20, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வநத 'பேட்ட' படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்துவிட்டது என்று அவர் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் 'பேட்ட' படப்பிடிப்பை முடித்துவிட்டு இன்று உபியில் இருந்து ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்

சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களின் ஒருசில கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். மீடூ விவகாரம் குறித்த கேள்விக்கு 'மீடூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது என்று தெரிவித்தார்.

வரும் டிசம்பர் 12ஆம் தேதி ரஜினியின் பிறந்த நாளில் கட்சி அறிவிப்பு வருமா? என்ற கேள்விக்கு, 'டிசம்பர் 12ஆம் தேதி கட்சி ஆரம்பிக்கவில்லை, அதே சமயத்தில், கட்சி தொடங்குவதற்கான பணிகள் 90% முடிவடைந்துவிட்டன' என்று தெரிவித்தார்.

மேலும் சபரிமலை விவகாரம் குறித்து கருத்து கூறிய ரஜினிகாந்த், 'சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன்; அதே நேரத்தில் ஐதீகத்தை பின்பற்ற வேண்டும். காலம் காலமாக உள்ள சம்பிரதாயத்தை மாற்றுவது முறையானது அல்ல. கோவிலின் ஐதீகத்தில் யாரும் தலையிடக் கூடாது. மதம் சம்மந்தப்பட்ட விஷயங்களில் பார்த்து செய்ய வேண்டும்' என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.