close
Choose your channels

யோகிபாபுவின் உழைப்பை கண்டு ஆச்சரியம் அடைந்த ரஜினி!

Thursday, May 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பில் நடிகர் யோகிபாபுவும் கலந்து கொண்டுள்ளார் என்பது தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில் 'தர்பார்' படத்திற்காக அவர் தொடர்ச்சியாக நீண்ட நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதால் அவர் நடித்து முடித்துள்ள 'தர்மபிரபு மற்றும் 'A1' ஆகிய படங்களின் டப்பிங் பணிகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இந்த இரண்டு படங்களின் டப்பிங்கை மும்பையில் வைக்க சொன்ன யோகிபாபு, 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் மும்பையில் உள்ள டப்பிங் ஸ்டுடியோவில் இந்த இரண்டு படங்களின் டப்பிங் பணியை முடித்து கொடுத்துள்ளாராம் யோகிபாபு.

யோகிபாபுவின் கடுமையான உழைப்பு மற்றும் தொழில்மீது அவர் வைத்துள்ள பக்தி ஆகியவற்றை உடனிருந்து கவனித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவரை நினைத்து தான் பெருமைப்படுவதாகவும், அவர் நிச்சயம் சினிமாத்துறையில் பெரிய ஆளாக வருவார் என்றும் கூறியுள்ளாராம். மேலும் 'தர்மபிரபு' டீசரை பார்த்த ரஜினிகாந்த், இந்த படத்தை தான் பார்க்க மிகவும் ஆவலுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார். சூப்பர் ஸ்டாரிடம் பலர் நடிப்புக்காக பாராட்டு பெற்றதுண்டு. ஆனால் கடுமையான உழைப்புக்காக அவரிடம் பாராட்டு பெற்ற மிகச்சிலரில் யோகிபாபுவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.