close
Choose your channels

ஊடகங்களில் என்னைப் பற்றிய செய்திகள் வரக்கூடாது: பிரபல நடிகை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Sunday, September 27, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தமிழ், தெலுங்கு, ஹிந்தி நடிகை ஒருவர் தன்னைப் பற்றிய செய்திகள் ஊடகங்களில் வரக்கூடாது என்று டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கியுள்ள நடிகை ரகுல் ப்ரீத்திசிங், போதைப்பொருள் விவகாரத்துடன் தன்னை இணைத்து எந்த செய்தியையும் ஊடகங்கள் வெளியிட கூடாது என டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஏற்கனவே பாலிவுட் நடிகை ரியா மற்றும் கன்னட நடிகை ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தீபிகா படுகோனே, ரகுல் ப்ரீத்திசிங் உள்பட 4 நடிகைகள் போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கி இருப்பதால் அவர்களிடம் என்சிபி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் போதைப்பொருள் விவகாரத்தில் தன்னை இணைத்து எந்த செய்தியையும் ஊடகங்கள் வெளியிட கூடாது என்று என்று ரகுல் ப்ரீத்தி சிங் டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.