close
Choose your channels

ரம்யா பாண்டியனின் அடுத்த படத்தை தயாரிக்கும் சூப்பர் ஸ்டார் நடிகர்!

Monday, December 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான ரம்யா பாண்டியன் நடிக்கும் அடுத்த படத்தை சூப்பர் ஸ்டார் நடிகர் ஒருவர் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குக் வித் கோமாளி சீசன் 1 மற்றும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ரம்யா பாண்டியன், சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் அதனை அடுத்து அவருக்கு ஒரு சில திரைப்படங்களிலும் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

சமீபத்தில் ரம்யா பாண்டியன் நடித்த ‘ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள திரைப்படத்தில் லிஜோ ஜோஸ் பெல்லிஸ்செரி மற்றும் ரம்யா பாண்டியன் இணைந்து நடிக்க உள்ளனர் என்பதும் இந்த படத்தின் இன்னொரு முக்கிய கேரக்டரில் அசோகன் நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி தான் புதிதாக ஆரம்பித்த ’மம்முட்டி கம்பெனி’ என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.