close
Choose your channels

சென்னையை விட்டு திடீரென கிளம்பிய ரம்யா பாண்டியன்.. என்ன காரணம்?

Tuesday, December 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ரம்யா பாண்டியன் தனது குடும்பத்துடன் சென்னையை விட்டு தனது சொந்த ஊருக்கு கிளம்பி உள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் நடிகை மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ரம்யா பாண்டியன் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் பிரபலம் என்பதும் அவருக்கு 2 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் அவ்வப்போது கிளாமர் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை கிறங்க வைக்கும் ரம்யா பாண்டியன் தற்போது தனது சொந்த ஊருக்கு செல்ல இருப்பதாக அறிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்திலுள்ள ஆழ்வார்திருநகரி தான் தனது சொந்த ஊர் என்றும் குடும்பத்துடன் தனது சொந்த ஊருக்கு செல்ல உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் குடும்பத்துடன் குற்றாலம் செல்ல இருப்பதாகவும் சந்தோஷமாக தருணமாக இருக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த பதிவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.