close
Choose your channels

பாவாடை தாவணியில் வெட்க சிரிப்புடன் ரம்யா பாண்டியன்: சகோதரர் பரசுபாண்டியன் கேட்ட செம கேள்வி

Saturday, August 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான ரம்யா பாண்டியன் பாவாடை தாவணியில் வெட்கச் சிரிப்புடன் கூடிய புகைப்படங்களை வெளியிட்ட நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

நடிகை ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராமில் பிரபலம் என்பதும் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டரை மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே.

ரம்யா பாண்டியன் பதிவு செய்யும் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் அவ்வப்போது அவருடைய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது அவர் பாவாடை தாவணி காஸ்ட்யூமில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அவருடைய வெட்கச் சிரிப்புடன் கூடிய இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

மேலும் இந்த புகைப்படத்தின் கேப்ஷனாக அவர் தனுஷ், சமந்தா நடித்த ’தங்கமகன்’ படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளை பதிவு செய்துள்ளார். அந்த வரிகள் பின்வருமாறு:

என்ன சொல்ல, ஏது சொல்ல,
கண்ணோடு கண் பேச வார்த்தயில்ல!
என்னென்னவோ உள்ளுக்குள்ள,
வெல்ல சொல்லாம, என் வெட்கம் தள்ள!

இந்த பதிவிற்கு ரம்யா பாண்டியனின் சகோதரர் பரசு பாண்டியன் கமெண்ட்டில் ‘யாரு அந்த பையன்? என்று கேள்வி கேட்க அதற்கு ரம்யா பாண்டியன் ’பாடல் வரிகளை ரசிக்க வேண்டும், ஆராயக்கூடாது’ என்று பதிலளித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.