close
Choose your channels

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினுக்கே இப்படியொரு சிக்கலா? பரபரப்புத் தகவல்!

Friday, February 25, 2022 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியக் கிரிக்கெட்டில் அணியில் முன்னணி பேட்ஸ்மேனாக இருந்து தனது திறமையால் பல அசைக்க முடியாத சாதனைகளைப் படைத்தவர்தான் சச்சின் டெண்டுல்கர். 25 ஆண்டுகாலம் இந்தியக் கிரிக்கெட் அணியில் விளையாடிய இவர் எதிரணி வீரர்களுக்கு எப்போதும் சிம்ம சொப்பமானகவே இருந்து வந்தார். மேலும் இன்றைய தலைமுறை வீரர்களும் இவரை குருவாகவே மதித்து வருகின்றனர்.

இந்நிலையில் தனது புகைப்படங்களை மார்ஃபிங் செய்து புகையிலை மற்றும் சூதாட்ட விளையாட்டுகளில் சிலர் பயன்படுத்தி வருவதாகவும் மேலும் சமூகவலைத் தளங்களில் அந்தப் புகைப்படங்கள் விளம்பரப் படுத்தப்படுவதாகவும் சச்சின் டெண்டுல்கர் வேதனை தெரிவித்துள்ளார். இதுபோன்ற தவறான விஷயங்களில் எனது புகைப்படங்கள் இருப்பது வேதனை அளிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்ட சச்சின், எனது முகத்தை மார்ஃபிங் செய்து கேசினோவை நான் ஆதரிப்பது போன்ற பல விளம்பரப் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருப்பது எனது கவனத்துக்கு வந்துள்ளது. சூதாட்டம், புகையிலை மது போன்ற பொருட்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தனிப்பட்ட முறையில் நான் ஒருபோதும் ஆதரித்ததில்லை.

மேலும் இதுபோன்ற விளம்பரத்திலும் நான் நடிக்கவில்லை. மக்களின் கவனத்தை திசை திருப்பி அவர்களை தவறாக வழிநடத்த எனது படங்கள் பயன்படுத்தப்படுவதைப் பார்ப்பது எனக்கு வேதனை அளிக்கிறது “ என வேதனையோடு பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள் பலரும் வருத்தம் வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.