close
Choose your channels

மண்ணை ஆள்றவனுக்கு தான் எல்லை, மண்ணை அள்றவனுக்கு இல்லை.. 'பத்து தல' டீசர்..!

Friday, March 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் உருவான ‘பத்து தல’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டீசர் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. சிம்புவின் பின்னணி குரலில் வெளியாகி உள்ள இந்த டீசரின் காட்சிகள் அதிரடி ஆக உள்ளன என்பதும் ஆக்சன் காட்சிகள் ரசிகர்களுக்கு சரியான விருந்தளிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் ஆவேசமாக தோன்றும் காட்சிகள் இந்த படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவலையே ஏற்படுத்தியுள்ளது.

இசைப்புயல் ஏஆர் ரகுமானின் அட்டகாசமான பின்னணி இசை, பரூக் பாஷாவின் ஒளிப்பதிவிள் உருவாகிய இந்த டீசர் நிச்சயம் சிம்பு ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து ரசிகர்களாலும் வரவேற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பு கௌதம், கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கௌதம் மேனன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை கிருஷ்ணா இயக்கியுள்ளார். ஸ்டுடியோ க்ரீன் ன் ஞானவேல் ராஜா இந்த படத்தை தயாரித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த டீசரில் சிம்புவின் குரலில் இடம்பெற்றுள்ள வசனம் இதுதான்:

மூன்று கடல் கூடுகிற குமரி கண்டத்தில் இந்த ஏஜி இராவணன் ஆட்சி தான் நடக்கிறது என்று எல்லா பயலுக்கும் தெரியும் இல்ல, மண்ணை ஆள்பவருக்கு தான் எல்லை, மண்ணை அள்ற எனக்கு இல்லை

நான் படியேறி மேல வந்தவன் இல்ல, எதிரிகளை மிதிச்சு மேல வந்தவன், என்னால எத்தனை பேர் செத்தான்னும் தெரியாது எத்தனை பேரு வாழ்ந்தான்னும் தெரியாது..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.