close
Choose your channels

சிம்பு ஆஜராகும் விவகாரம். நீதிமன்றம் முக்கிய உத்தரவு

Monday, January 11, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பீப் பாடல் விவகாரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தபட்ட நீதிமன்றத்தில் சிம்பு ஆஜராகி பெற்றுக்கொள்ளலாம் என ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று சென்னை காவல்துறை முன் ஆஜராக சிம்புவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

எனவே இன்று சிம்பு ஆஜராவாரா? என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் காவல்துறை முன் ஆஜராக தனக்கு மேலும் அவகாசம் அளிக்கும்படி சிம்பு தரப்பில் இருந்து இன்று காலை புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு பிற்பகலில் விசாரணைக்கு வரும் என்று கூறப்பட்ட நிலையில் சற்று முன் இந்த மனு மிதான விசாரணை நடந்தது. இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் ஜனவரி 29ஆம் தேதிக்குள் சிம்பு சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.