close
Choose your channels

'பத்து தல' படத்திற்கு பின் ஏற்பட்ட கேப்.. சிம்புவின் மாஸ் திட்டம்!

Thursday, December 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிம்பு சமீபத்தில் ’பத்து தல’ என்ற படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகு தற்போது சில மாதங்கள் அவருக்கு ஓய்வு கிடைத்துள்ளதாகவும் இந்த கேப்பில் அவர் ஒரு மாஸ் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு என்பதும் அவர் நடித்த ’மாநாடு’ மற்றும் ’வெந்து தணிந்தது காடு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகின என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ’பத்து தல’ என்ற திரைப்படத்தில் சிம்பு நடித்து வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பதும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டு இந்த படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’பத்து தல’ படத்திற்கு பின்னர் அவர் ’கொரோனா குமார்’ என்ற படத்தில் நடிப்பார் என்றும் அது மட்டுமின்றி ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இருப்பினும் அவரது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் ’பத்து தல’ படத்திற்கு பின் ஏற்பட்ட கேப்பில் சிம்பு தற்காப்பு கலை ஒன்றின் பயிற்சியில் ஈடுபட போவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அவர் தனது அடுத்த படத்திற்காக தான் இந்த தற்காப்பு பயிற்சி ஈடுபடப் போகிறார் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.