close
Choose your channels

அருவி இயக்குனரின் 'வாழ்' படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கின்றாரா?

Friday, June 28, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் 'கனா' மற்றும் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' ஆகிய படங்கள் வெளியான நிலையில் அவரது தயாரிப்பில் உருவாகும் மூன்றாவது படத்தின் டைட்டில் 'வாழ்' என நேற்று அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த படத்தை 'அருவி' இயக்குனர் அருண்பிரபு இயக்கி வருகிறார்.

முற்றிலும் புதுமுகங்கள் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருப்பதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வரும் என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனும் நானும் உறவினர்கள் என்றும், 'அருவி' படத்திற்கு முன்னரே இந்த படத்தை சிவகார்த்திகேயனுடன் இணைந்து இயக்க திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் 'அருவி' பட வாய்ப்பு வந்ததால் இந்த படம் தள்ளி போனதாகவும் கூறிய அருண்பிரபு, 'அருவி'யின் வெற்றியால் தனக்கு பொறுப்பு மேலும் அதிகரித்துள்ளதாகவும், தன்னிடம் இருக்கும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய நிலையில் தான் இருப்பதாகவும் தெரிவித்தார்.

'அருவி' போலவே இந்த படத்திலும் காதல், காமெடி உள்பட அனைத்து அம்சங்களும் இருக்கும் என்று அருண்குமார் கூறினார். மேலும் 'கனா' படம் போலவே சிவகார்த்திகேயன் இந்த படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த தகவலை அருண்குமார் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.