close
Choose your channels

சிம்புவுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து சிவகார்த்திகேயன்

Saturday, April 7, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்புவுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து சிவகார்த்திகேயன்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைந்துவிட்ட சிவகார்த்திகேயன் ஒருசில வருடங்களுக்கு முன் தான் சிம்பு படத்தில் பணியாற்றியதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

சிம்பு நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கிய 'வேட்டை மன்னன்' என்ற படத்தில் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்ததாகவும், சிம்பு தான் பேசும் வசனங்களை முதலில் தன் முன்னர்தான் பேசிக்காட்டுவார் என்றும் தெரிவித்துள்ள சிவகார்த்திகேயன், ஒருசில காரணங்களால் அந்த படம் திடீரென நின்றுபோனது என்றும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அந்த படத்தால் தான் சிம்புவின் நண்பராகிவிட்டதாகவும் தன்னுடைய ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் தினத்தில் சிம்பு தன்னை தொலைபேசியில் வாழ்த்து தெரிவிப்பார் என்றும் சிவகார்த்திகேயன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

'வேட்டை மன்னன்' இயக்குனர் நெல்சனும் சிவகார்த்திகேயனும் ஏற்கனவே தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இணைந்து பணியாற்றியவர்கள் என்பதும் மேலும் 'நெல்சன், தற்போது நயன்தாரா நடித்து வரும் 'கோலமாவு கோகிலா' என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.