close
Choose your channels

சூர்யா ஒரு பதுங்கும் புலி, விரைவில் பாய்வார்! சிவகுமார் ஆவேச பேச்சு

Thursday, February 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்த ‘சூரரை போற்று’ திரைப்படத்தின் பாடல் ஒன்று இன்று ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த விழாவில் சூர்யாவின் தந்தை சிவகுமார் கலந்து கொண்டு பேசியதாவது:

இப்படி ஒரு அற்புதமான ஏற்பாடு செய்த என்னுய ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அதற்குத் துணையாக இருந்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

சூரரை போற்று’ படத்தில் பணிபுரிந்த சுதா, சூர்யா, மோகன்பாபு ஜிவி பிரகாஷ் ஆகிய அனைவருக்கும் இமாலய வெற்றி கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நான் சினிமாவில் அறிமுகமானபோது என்னுடைய குடும்பத்தில் இருந்து இன்னொரு நடிகர் வருவார் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை பார்த்து கொண்டிருந்த சூர்யா, தற்செயலாக நடிகரானார். எங்களை பொறுத்தவரை சூர்யா ஒரு புதையல். சூர்யா இப்படி ஒரு பையனை கொடுத்த கடவுளுக்கு நான் நன்றி சொல்கிறேன். அவர் சைலன்டாக இருக்கின்றார் என்று நினைக்க வேண்டாம். அவர் ஒரு பதுங்கும் புலி. விரைவில் அவர் பாய்வார்.

மணிரத்னம் அவர்களிடம் பணிபுரிந்து கொண்டிருந்த காலத்தில் இருந்து எனக்கு சுதாவை தெரியும். அவருக்கு இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள். அதேபோல் இளையராஜா, எம் எஸ் விஸ்வநாதன் இவர்கள் வரிசையில் ஜிவி பிரகாஷ் இன்னும் இமயமலை அளவு உயர அவரை நான் வாழ்த்துகிறேன்’ என்று சிவகுமார் பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.