close
Choose your channels

மூன்று தாடிக்காரர்களின் வழி வாழும், திரையுலகை ஆளும் தாடிக்காரர்: சூரி வாழ்த்து

Friday, September 4, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் வெற்றிமாறன் கடந்த 2007ஆம் ஆண்டு ’பொல்லாதவன்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இந்த 13 வருடங்களில் அவர் இயக்கியது 5 திரைப்படங்கள் தான் என்பதும் அந்த 5 திரைப்படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான அவரது ’அசுரன்’ திரைப்படம் மாபெரும் வெற்றியைக் குவித்ததோடு, வசூலிலும் சாதனை செய்தது

இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு திரையுலகினர் தொடர்ச்சியாக இன்று காலை முதல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சினிமா ரசிகர்களும் வெற்றிமாறனுக்கு தங்களது சமூக வலைதளத்தின் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோவான நடிகர் சூரி தனது சமூக வலைத்தளத்தில் இயக்குனர் வெற்றிமாறனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். வள்ளுவர், பெரியார் மற்றும் நம்மாழ்வார் ஆகிய மூன்று தாடிக்காரர்களோடு அவர் வெற்றிமாறனை ஒப்பிட்டுள்ளார். அவர் தனது வாழ்த்தில் கூறியிருப்பதாவது:

வாழ்வியல் அறமாக நிற்பதில் வள்ளுவன் வழி... சுதந்திரத்தை, சுய மரியாதையை சொல்வதில் பெரியார் வழி... இயற்கையை போற்றுவதில் நம்மாழ்வார் வழி... மூன்று தாடிக்காரர்களின் வழி வாழும், திரையுலகை ஆளும் தாடிக்கார அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.