close
Choose your channels

மயக்க நிலையிலிருந்து மீண்டார் எஸ்பிபி: மகிழ்ச்சியான செய்தி கூறிய எஸ்பிபி சரண்

Tuesday, August 25, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த மூன்று வாரங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கடந்த சில நாட்களாக சீராக இருப்பதாக மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று தனது தந்தை கண்விழித்து பார்த்ததாகவும் தன்னையும் தனது தாயாரையும் நலம் விசாரித்ததாகவும் எஸ்பிபி சரண் அவர்கள் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், ‘எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் 90% மயக்க நிலையிலிருந்து மீண்டு விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவர்களிடம் எஸ்பிபி உடல்நிலை குறித்து தான் சற்றுமுன் பேசியதாகவும், சிகிச்சைக்கு அவரது உடல்நிலை நன்றாக ஒத்துழைப்பதாகவும், அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர் என்றும் கூறினார். மேலும் விரைவில் தனது தந்தையை ஆரோக்கியமான ஒரு நபராக அனைவரும் காணலாம் என்றும் அந்த நாள் நம் அனைவருக்கும் இனிமையான நாளாக அமையும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் எஸ்பிபி அவர்கள் குணமாக நடத்தப்பட்ட பிரார்த்தனைகளுக்கு தாமும் தனது குடும்பத்தாரும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனது தந்தையின் சிகிச்சைக்கு இரவு பகலாக பாடுபட்ட மருத்துவர்களுக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

View this post on Instagram

#SPB health update

A post shared by S. P. Charan/Producer/Director (@spbcharan) on

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.