close
Choose your channels

சென்சுரி அடித்த விஜய்க்கு 'மேன் ஆஃப் த மேட்ச்' விருது வழங்கிய எஸ்.ஆர்.பிரபு

Saturday, September 1, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'அர்ஜூன் ரெட்டி' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிய விஜய் தேவரகொண்ட நடித்த அடுத்த படமான 'கீதா கோவிந்தம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி தென்னிந்தியா முழுவதும் ஹிட்டாகியுள்ளது.

ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படத்தின் வசூல் ரூ.100 கோடியை தாண்டிவிட்டது. இந்த நிலையில் வசூலில் முதன்முதலாக செஞ்சுரி போட்ட விஜய்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அந்த வகையில் பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இந்த படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டாவுக்கு 'மேன் ஆஃப் த மேட்ச்' விருது வழங்குவதாகவும், அடுத்த போட்டிக்காக காத்திருப்பதாகவும் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக விஜய் தேவரகொண்டா தனது சமூக வலைத்தள பக்கத்தில், 'என்னுடைய முதல் செஞ்சுரிக்கு காரணமான இயக்குனர், நாயகி ராஷ்மிகா மந்தனா உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாகவும், தெலுங்கு, தமிழ், கன்னட மற்றும் மலையாள ரசிகர்களுக்கு தனது நன்றிகள் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.