close
Choose your channels

ஒரே நேரத்தில் மூன்று இரண்டாம் பாக படங்களில் பணிபுரியும் ஸ்டண்ட் சில்வா

Wednesday, January 17, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் தற்போது இரண்டாம் பாக சீசன் கொடிகட்டி பறக்கின்றது. 2.0, விஸ்வரூபம் 2 முதல் மாரி 2 வரை சுமார் பத்து இரண்டாம் பாக திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் ரஜினியின் 2.0, விக்ரமின் 'சாமி 2' மற்றும் தனுஷின் 'மாரி 2' ஆகிய மூன்று இரண்டாம் பாக படங்களில் ஒரே நேரத்தில் பணிபுரிந்து வருகிறார் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா.

இந்த படங்களின் அனுபவம் குறித்து ஸ்டண்ட் சில்வா கூறியபோது, 'இதுவரை பணிபுரிந்த படங்களில் ஸ்டண்ட் காட்சிகளுக்காக அதிக நாட்கள் பணிபுரிந்த படம் '2.0' என்று கூறிய சில்வா, இந்த படத்தின் படப்பிடிப்பில் எப்போதும் சுமார் 2500 பேர் இருப்பார்கள் என்றும் அவற்றில் 250 பேர் ஸ்டண்ட் நடிகர்கள் இருப்பார்கள் என்றும், இதிலிருந்து இந்த படத்தின் பிரமாண்டத்தை புரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்

அதேபோல் ஹரி மற்றும் விக்ரம் மீண்டும் இணைந்துள்ள 'சாமி 2' படத்தில் இதுவரை வெளிவராத வித்தியாசமான சண்டைக்காட்சிகள் இந்த படத்தில் தேவை என்ற சவாலை தனக்கு ஹரி, விக்ரம் இருவரும் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் 'மாரி' படத்தின் ஹிட்டுக்கு அதிரடி ஸ்டண்ட் காட்சிகளும் ஒரு முக்கிய காரணம் என்பதால் இந்த படத்திலும் தனக்கு கடுமையான சவால் காத்திருப்பதாகவும் ஸ்டண்ட் சில்வா தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.