close
Choose your channels

சென்னை ஈசிஆர் சாலையில் சூர்யா-சமந்தாவின் படப்பிடிப்பு

Wednesday, October 28, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 1ஆம் தேதி வெளியான விஜய் நடித்த 'புலி' திரைப்படத்தின் பிரமாண்டமான செட்டுக்கள் அனைத்து சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. இதே ஸ்டுடியோவில் தசாவதாரம், ஆயிரத்தில் ஒருவன், விஜய் 59 போன்ற பல படங்களின் படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளன.

இந்நிலையில் சூர்யா தற்போது நடித்து வரும் '24' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பும் இதே ஸ்டுடியோவில் தற்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பை மற்றும் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்ட நிலையில் தற்போது இறுதிக்கட்டமாக இந்த ஸ்டுடியோவில் முக்கிய காட்சிகளின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருவதாகவும், இந்த படப்பிடிப்பு இன்னும் பத்து நாட்கள் நடைபெறும் என்றும் அத்துடன் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறவுள்ளதாகவும் படக்குழுவினர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

சூர்யா, சமந்தாவுடன் நித்யாமேனன், அஜய், சத்யன், சரண்யா உள்பட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் வரும் 2016 பொங்கல் திருநாளில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.