close
Choose your channels

வனிதா விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான சூர்யா தேவிக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

Sunday, July 26, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை வனிதாவின் திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோவில் பேசிய சூர்யாதேவி என்ற பெண் சமீபத்தில் கைது செய்யப்பட்டார் என்பதும், அதன்பின்னர் நடிகை கஸ்தூரியின் முயற்சியால் அவர் ஜாமீனில் வெளிவந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நடிகை வனிதா விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான சூர்யா தேவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி சூர்யா தேவியை விசாரித்த பெண் காவல் ஆய்வாளர் ரேணுகாவுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனையடுத்து சூர்யா தேவி மற்றும் பெண் காவல் ஆய்வாளர் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் சூர்யாதேவியுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.