close
Choose your channels

2024ல் ரிலீஸ் ஆகும் சூர்யா படத்தின் பணியை இப்போதே தொடங்கிய இயக்குனர்!

Saturday, April 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

2024 ஆம் ஆண்டு வெளியாக இருக்கும் சூர்யா படத்தின் பணிகளை இப்போதே அந்த படத்தின் இயக்குனர் தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சூர்யா தற்போது தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி அருகே முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் சூர்யா அவ்வப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’வாடிவாசல்’ படத்தின் டெஸ்ட் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு வருகிறார் என்பதும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் நிலையில், அவர் காளை மாட்டுடன் பயிற்சியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’வாடிவாசல்’ படத்தை முடித்துவிட்டு சூர்யாவின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது இயக்குனர் ரவிக்குமார் அவரது அடுத்த படத்தை இயக்கும் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தின் பணிகளை முடித்து விட்ட இயக்குனர் ரவிக்குமார், அடுத்ததாக சூர்யா நடிக்கும் படத்தின் பணிகளை தொடங்கி விட்டதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளுக்கு மட்டும் ஒரு ஆண்டு தேவை என்றும் பேட்டி ஒன்றில் ரவிகுமார் கூறியுள்ளார்.

ட்ரீம்வாரியர் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த உலகில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த கதையம்சம் கொண்டது என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ’இன்று நேற்று நாளை’ என்ற வெற்றி படத்தை இயக்கிய ரவிக்குமாரின் ’அயலான்’ படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.