close
Choose your channels

பாடகி சின்மயிக்கு நன்றி கூறிய சூர்யா!

Wednesday, March 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜோதிகா நடித்த திரைப்படம் ’பொன்மகள் வந்தாள்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் கொரோனா பிரச்சனை முடிந்ததும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’வான் தூரல்கள்’ என்ற பாடல் சற்றுமுன் வெளியாகியது. இந்த பாடலை கவிஞர் உமாதேவி எழுத பாடகி சின்மயி பாடியுள்ளார். உமாதேவியின் அசத்தலான வரிகளும் சின்மயியின் அருமையான குரலும் இந்த பாடலை மிகவும் மெருகேற்றியுள்ளதாக சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது
கோவிந்து வசந்த இசையமைத்த இந்தப் பாடல் மனதை தொடும் வகையில் மிகவும் அருமையாக அமைந்து உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

வான் தூரல்கள் வாழ்த்துக்கள் பாட
நான் மீண்டுமே பூக்கிறேன்
நீதானடி இனி நீதானடி தந்தையே வாழ்நாட்களை
தாய் நானடி தந்தை நானடி
வழியாகிறேன் வாயென் வாகியே
பறந்து போகலாம் திறந்த வானிலே
ஒளியாய் நான் இருப்பேன்
உயிரே வா உயிரே
வானமாய் நானாகியே
சிறு வாடை தீண்டிடாமல் காப்பேன்
தோழிபோல் நானாகியே
உன் தேவை தேடி தேடி சேர்ப்பேன்

என்று தொடங்கும் இந்த பாடல் உண்மையிலேயே மனதை மயக்கும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது

ஜோதிகா, தியாகராஜன், பாக்கியராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப்போத்தன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஜேஜே பிரட்ரிக் இயக்கியுள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.