close
Choose your channels

மாஸ்டர் படப்பிடிப்பிலிருந்து வருமான வரித்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நடிகர் விஜய்..!

Wednesday, February 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மாஸ்டர் படப்பிடிப்பிலிருந்து வருமான வரித்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நடிகர் விஜய்..!

வருமான வரித்துறை விசாரணையில் ஆஜராகும்படி நடிகர் விஜய்க்கு மாஸ்டர் படப்பிடிப்பு தளத்திற்கே வந்து சம்மன் அளித்துள்ளனர். படப்பிடிப்பு தளத்திலிருந்து அதிகாரிகளால் விஜய் அழைத்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விஜய் இதற்கு முன்பாக பிகில் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்திருந்தது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் உள்ள இதன் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் விஜய்க்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.

முதலில் படப்பிடிப்பு குழுவினருடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், நடிகர் விஜயை சந்தித்து சம்மன் அளித்துள்ளனர். இதன்பின்னர் சுமார் ஒரு மணிநேரம் விஜயிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

படப்பிடிப்பிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு வருமான வரித்துறையினரின் முழு கட்டுப்பாட்டில் விஜய் இருப்பதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.