close
Choose your channels

நீண்ட இடைவெளிக்கு பின் மகனை பள்ளிக்கு அழைத்து செல்லும் தமிழ் நடிகர்! பெற்றோர்களுக்கு அறிவுரை

Tuesday, February 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நீண்ட இடைவேளைக்கு பின்னர் தனது மகனை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் தமிழ் நடிகர் ஒருவர் பெற்றோர்களுக்கு தனது அறிவுரையையும் கூறியுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டடாலும், ஒமிக்ரான் வைரஸ் காரணமாக மீண்டும் ஒருசில நாட்களில் பள்ளிகள் மூடப்பட்டது. இந்த நிலையில் இன்று முதல் தமிழகம் முழுவதும் 1ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான சிபிராஜ் தனது மகனை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் அந்த பதிவில், ‘இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் பள்ளிக்கு செல்கிறோம். அதே வயதுடைய குழந்தைகளுடன் தொடர்பு கொள்வது அவர்களின் மன ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம். எனவே அனைத்து பெற்றோர்களும் தங்களது குழந்தைகள் தகுதி உடையவர்களாக இருந்தால், நோய் அறிகுறி இல்லாதவர்களாக இருந்தால் பள்ளிக்கு அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.