close
Choose your channels

தமிழகத்தில் கனமழை: தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Thursday, October 4, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ள நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் என்ன சொல்கிறார் என்பதை பார்ப்போம்

தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் நல்ல மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் மழை விட்டுவிட்டு பெய்யும். மேலும் மன்னார் வளைகுடாவில் இருந்து இலங்கை கடற்கரை வரை நீடிக்கும் மேலடுக்கு சுழற்சியால் வட தமிழகத்தில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு அதிகம். இன்றும் நாளையும் தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்று கூற முடியாது என்றாலும் திருவள்ளூர் முதல் தூத்துக்குடி வரை நாளையும், மேற்கு தமிழக மாவட்டங்களான கோவை, ஈரோடு , நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களிலும் நல்ல மழை பெய்யும்

அதேபோல் ராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.