close
Choose your channels

ரஜினியுடன் இணைந்தார் த்ரிஷா?

Thursday, November 26, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுந்தர் சி இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான 'அரண்மனை' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது அவர் இயக்கி வருகிறார். 'அரண்மனை 2' படத்தின் வசனக்காட்சிகளின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் முடிந்தது. தற்போது இன்னும் இரண்டு பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு மட்டுமே நடைபெறவுள்ள நிலையில் ஒரு பாடல் காட்சி பாங்காக்கில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.


இந்த பாடல் காட்சிக்காக சித்தார்த் மற்றும் த்ரிஷா பாங்காக் சென்றுள்ளனர். ஏற்கனவே பாங்காக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வரும் நிலையில் த்ரிஷா உள்பட 'அரண்மனை 2' படக்குழுவினர் பாங்காக் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் ஏராளமான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் அதற்கென ஒரு டீம் இரவுபகலாக சிஜி பணியை செய்து வருகின்றனர். சித்தார்த், ஹன்சிகா, த்ரிஷா, பூனக் பாஜ்வா, மனோபாலா, கோவை சரளா உள்பட பலர் நடித்துள்ல இந்த படத்தை குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் தயாரித்து வருகிறது. ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.