close
Choose your channels

நம்பர் ஒன் இடத்தை பிடித்த த்ரிஷா .. 'தக்லைஃப்' படத்திற்கு சம்பளம் இத்தனை கோடியா?

Friday, March 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ என்ற திரைப்படத்தில் குந்தவை என்ற கேரக்டரில் நடித்த பிறகு த்ரிஷா காட்டில் பேய் மழை பொழிகிறது என்றும் அவர் தொடர்ச்சியாக பல பிரபலங்களுடன் இணைத்து நடித்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் ‘தக்லைஃப்’ படத்திற்காக த்ரிஷா வாங்கிய சம்பளத்தை பார்க்கும் போது அவர்தான் தென்னிந்திய திரையுலகில் நம்பர் ஒன் நடிகை த்ரிஷா என்பது தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் ‘தக்லைஃப்’, சிரஞ்சீவி நடித்து வரும் ’விஸ்வாம்பரா’, மோகன்லால் நடித்து வரும் ’ராம்’ நிவின் பாலி நடித்த வரும் ’ஐடென்டிட்டி’ மற்றும் அஜித் நடித்து வரும் ’விடாமுயற்சி’ என பிரபலங்களுடன் த்ரிஷா தொடர்ச்சியாக நடித்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். அது மட்டும் இன்றி விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தில் அவர் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளதாகவும் ஒரு சிறு கேரக்டரில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய்யுடன் ’லியோ’ படத்தில் நடிப்பதற்காக நடிகை த்ரிஷா ரூ.5 கோடி சம்பளம் வாங்கிய நிலையில் தற்போது ‘தக்லைஃப்’ படத்திற்காக ரூ.12 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாகவும் இதிலிருந்து நயன்தாராவை பின்னுக்கு தள்ளிவிட்டு அவர் நம்பர் ஒன் இடத்தை பிடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ’தளபதி 69’ படத்திற்காக விஜய் ரூ.250 கோடி சம்பளம் வாங்கி இந்தியாவின் நம்பர் ஒன் நடிகர் என்ற இடத்தை பிடித்துவிட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது தென்னிந்தியாவின் நம்பர் ஒன் நடிகையாக த்ரிஷா இருப்பதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.