close
Choose your channels

பொங்கல் போட்டியில் இருந்து விலகியது அரண்மனை 2'

Tuesday, December 22, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜனவரியில் வரும் பொங்கல் திருநாளில் நீண்ட விடுமுறை இருப்பதால் இந்த நாளில் படத்தை வெளியிட பெரும்பாலான தயாரிப்பாளர்கள் முன்வருவார்கள். 2016ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் விஷாலின் 'கதகளி', இயக்குனர் பாலாவின் 'தாரை தப்பட்டை', சிவகார்த்திகேயனின் 'ரஜினிமுருகன்' மற்றும் சுந்தர் சி இயக்கிய 'அரண்மனை 2' ஆகிய படங்கள் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


ஆனால் தற்போதைய சூழ்நிலையில் 'அரண்மனை 2' திரைப்படம் இரண்டு வாரங்கள் கழித்து அதாவது ஜனவரி 29ஆம் தேதி ரிலீஸாகும் என கூறப்படுகிறது. விஷால் நடித்த 'கதகளி' மற்றும் சுந்தர் சியின் அரண்மனை ஆகிய இரண்டு படங்களின் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் உதயநிதியின் 'கெத்து' படமும் ரிலீஸுக்கு தயார் நிலையில் உள்ளது. பொங்கல் ரிலீஸில் இருந்து மேலும் ஏதாவது ஒரு படம் பின்வாங்கினால் உடனே பொங்கலுக்கு 'கெத்து' படத்தை ரிலீஸ் செய்ய உதயநிதி தயார் நிலையில் இருப்பதாகவும், அல்லது இந்த படத்தை அவர் பிப்ரவரியில் ரிலீஸ் செய்வார் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.