close
Choose your channels

பிரபல சீரியல் நடிகை தற்கொலை முயற்சி: சின்னத்திரையுலகில் பரபரப்பு!

Thursday, January 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல சின்னத்திரை சீரியல் நடிகை ஒருவர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை முயற்சி செய்துள்ளதால் சின்னத்திரை உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த நடிகை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வம்சம் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜெயஸ்ரீ. இவர் இன்னொரு சின்னத்திரை நடிகரான ஈஸ்வர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடைபெற்ற சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கணவர் ஈஸ்வர் தனது தன்னை கொடுமை படுத்துவதாகவும் தான் நடித்து வரும் தொலைக் காட்சிகளின் படப்பிடிப்பின் போது நேரில் வந்து தொல்லை கொடுப்பதாகவும் சமீபத்தில் நடிகை ஜெயஸ்ரீ காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அதுமட்டுமின்றி தனக்கு கொலை மிரட்டல் வந்து கொண்டிருப்பதாகவும் இதற்கு பின்னணியில் ஈஸ்வர்தான் இருப்பதாகவும் அவர் புகார் கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று திடீரென அவர் தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதனை அடுத்து அவரை மருத்துவமனையில் அவரது உறவினர்கள் அனுமதித்தனர். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். சின்னத்திரை நடிகை ஒருவர் திடீரென தற்கொலைக்கு முயன்றுள்ளது சின்னத்திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos