close
Choose your channels

சுசீந்திரன் இயக்கத்தில் உதயநிதியின் அடுத்த படபூஜை

Wednesday, January 20, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உதயநிதி ஸ்டாலின் நடித்த 'கெத்து' திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. மேலும் அவர் நடித்து வரும் அடுத்த படமான 'மனிதன்' படத்தின் படப்பிடிப்பும் முடிவடையும் தருவாயில் உள்ளது.


இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும்ம் அடுத்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. 'வெண்ணிலா கபடிக்குழு', 'ஜீவா', 'பாண்டியநாடு' உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கிய சுசீந்திரன் இயக்கவுள்ள இந்த படத்தில் விஷ்ணு, நடிகை மஞ்சிமா மோகன் உள்பட பலர் நடிக்கவுள்ளனர். மஞ்சிமா மோகன், கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இமான் இசையமைப்பில் மதி ஒளிப்பதிவில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த தகவல்களை உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.