close
Choose your channels

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறுபவர் யார்?

Sunday, August 19, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் ஆன போட்டியாளர்களில் ஒருவர் வெளியேறி கொண்டிருக்கும் நிலையில் இன்று எவிக்சன் ஆகும் நபரை கமல்ஹாசன் அறிவிக்கவுள்ளார். இந்த வார எவிக்சன் பட்டியலில் வைஷ்ணவி, செண்ட்ராயன், ஜனனி, டேனியல் மற்றும் ரித்விகா என ஐந்து பேர் இருந்தனர். இதில் ரித்விகா நேற்று காப்பாற்றப்பட்ட நிலையில் மீதி நான்கு பேர்களில் இன்று ஒருவர் வெளியேறவுள்ளார்.

இந்த நிலையில் கமல் இந்த நால்வரிடம் கருத்து கேட்டு வருகையில் சொல்லி வைத்தால்போல் நால்வருமே வீட்டில் இருந்து வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்படுவதாக கூறுகின்றனர்.

இந்த நிலையில் இந்த வாரம் வைஷ்ணவி வெளியேறியிருப்பதாக நிகழ்ச்சியின் படப்பிடிப்பை நேரில் பார்த்தவர்கள் டுவீட் செய்துள்ளனர். வைஷ்ணவிக்கு ஒரு வாய்ப்பை பிக்பாஸ் கொடுத்தும் அதனை அவர் பயன்படுத்தாமல் தன்னுடைய சிண்டுமுடியும் வேலையை தொடர்ந்ததால் அவருக்கு குறைவான வாக்குகள் பதிவாகியிருப்பதாக தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.