close
Choose your channels

இதுதான் நீங்கள் ஆட்சி செய்ய விரும்பிய நாடா? பிரதமருக்கு வரலட்சுமி கேள்வி

Wednesday, April 18, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆசிபா உள்பட ஒன்றுமறியாத பச்சை குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் கொலையும் செய்யப்பட்டு வரும் சம்பவங்கள் இந்தியாவில் அதிகரித்து கொண்டே உள்ளது. சட்டங்கள் கடுமையாக இல்லாததே இத்தகைய கொடூர சம்பவங்கள்ல் அதிகரிக்க காரணம் என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வயது முதிர்ந்த ஒருவர் பெண் குழந்தையை பாலியல் உறவு கொள்ள முயற்சிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த முதியவரை அங்குள்ள மக்கள் அடிக்கும் காட்சியும் அந்த வீடியோவில் உள்ளது. ஒரு முதியவருக்கு பேத்தி வயதுள்ள குழந்தையுடன் உறவு கொள்ள துணிச்சல் எப்படி வந்தது? இந்த வீடியோ குறித்து பலரும் எழுப்பிவரும் கேள்விதான் இது

இந்த வீடியோ குறித்து நடிகை வரலட்சுமி தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'இதுதான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகமா? இப்படிப்பட்ட நாட்டைத்தான் நீங்கள் ஆளவேண்டும் என்று விரும்பினீர்களா பிரதமர் மோடி அவர்களே! உங்களுக்கு வாக்களித்த மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுத்து ஆட்சி செய்யுங்கள். உடனடியாக பெண் குழந்தைகளை கற்பழிப்பவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கும் சட்டத்தை நிறைவேற்றுங்கள் என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.