close
Choose your channels

இன்னும் ஒரே ஒருநாள் தான், எங்க தல வர்றாரு விசில் போடு: பிரபல நடிகையின் டுவீட்

Friday, September 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் நாளை முதல் தொடங்க உள்ளது என்பதும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்தநிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் முதல் முறையாக ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் இந்த போட்டிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் கிரிக்கெட் போட்டிகள், புதிய திரைப்படங்கள் உள்ளிட்ட எந்த பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லாமல் இருக்கும் பொது மக்களுக்கு முதல் முறையாக ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா சற்று ஆறுதலை அளித்துள்ளது. எனவே ஐபிஎல் போட்டிகளை ரசிக்க கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

குறிப்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி போட்டிக்கு பின்னர் தல தோனி களம் இறங்கும் முதல் போட்டி நாளை தான் என்பதால் ரசிகர்களின் ஆர்வம் பலமடங்கில் உள்ளது.

இந்த நிலையில் இந்த போட்டியை தான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாக பிரபல தமிழ் நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது டுவிட்டரில் கூறியுள்ளார். இன்னும் ஒரே ஒரு நாள் தான், தல தோனியை நான் மிகவும் மிஸ் செய்தேன். எங்க ’தல’க்கு விசில் போடு’ என்று அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். இந்த டுவிட் போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.