close
Choose your channels

தனுஷ்-வெற்றிமாறனின் 'வடசென்னை 2' குறித்த முக்கிய தகவல்

Friday, May 8, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைப்பில் உருவாகிய ’பொல்லாதவன்’ மற்றும் ’ஆடுகளம்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் மூன்றாம் முறையாக இருவரும் இணைந்த திரைப்படம் ‘வடசென்னை 2’. கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ‘வடசென்னை 2’படத்தின் இரண்டாம் பாகம் மிக விரைவில் உருவாகும் என்றும் ஏற்கனவே தனுஷ் மற்றும் வெற்றிமாறன் ஒருசில பேட்டிகளில் கூறி இருந்தனர் என்றும் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டதாக செய்திகளும் வெளியானது.

இந்த நிலையில் தற்போது சூரி நடிக்கும் படம் ஒன்றையும் சூர்யா நடிக்கும் ’வாடிவாசல்’ படத்தையும் வெற்றிமாறன் இயக்க திட்டமிட்டுருப்பதால் வெற்றிமாறன் படம் சில ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தனது பேட்டி ஒன்றில் வெற்றிமாறன் கூறியபோது, வெற்றிமாறன் படம் விரைவில் உருவாகும் என்றும், ஆனால் அந்த படத்தை தான் வெப்சீரிஸ்ஸாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளதாகவும் கூறினார். இருப்பினும் இதுகுறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.