close
Choose your channels

விக்னேஷ் சிவன் - நயன் தாரா திருமணத்தால் மன உளைச்சலுக்கு ஆளான நபர்: வருத்தத்துடன் பேட்டி!

Monday, May 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமணத்தால் மன உளைச்சலுக்கு ஆளானதாக விக்னேஷ் சிவனின் உறவினர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இயக்குனர் விக்னேஷ் சிவனின் சொந்த ஊர் லால்குடி. சிவக்கொழுந்து மற்றும் மீனாகுமாரி தம்பதிக்கு விக்னேஷ் சிவன் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இரண்டு குழந்தைகள். விக்னேஷ் சிவனின் பெரியப்பா மாணிக்கம் என்பவருக்கு குழந்தை இல்லை என்பதால் விக்னேஷ் சிவன் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரையும் தங்களுடைய சொந்த குழந்தை போல வளர்த்து வந்தனர்.

ஆனால் பணி நிமித்தம் காரணமாக விக்னேஷ் சிவனின் தாய் தந்தை கடந்த 1970களிலேயே சென்னை வந்துவிட்டனர். அதன்பின்பு விக்னேஷ் சிவன் குடும்பத்திற்கும் தங்களது குடும்பத்துக்கும் பெரிதாக தொடர்பு இல்லை என கூறியுள்ள விக்னேஷ் சிவனின் பெரியப்பா மாணிக்கம், விக்னேஷ் சிவனின் தங்கை ஐஸ்வர்யா திருமணத்திற்கு தன்னை அழைக்கவில்லை என வருத்தத்துடன் கூறியுள்ளார்.

இந்தநிலையில் தற்போது நடிகை நயன்தாராவை விக்னேஷ் சிவன் திருமணம் செய்யப் போகும் நிலையில் இதுவரை எங்களுக்கு எந்தவித அழைப்பு விடுக்கவில்லை என்பது மன உளைச்சலாக இருப்பதாக மாணீக்கம் வருத்தத்துடன் கூறியுள்ளார். இருப்பினும் விக்னேஷ் சிவன் எங்களது மகன் என்பதால் எங்கிருந்தாலும் நலமுடன் வாழ வேண்டும் என்பதே எனது ஆசை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.