close
Choose your channels

பாலியல் வன்கொடுமையால் பலியான சிறுமி ஜெயப்ரியா குடும்பத்திற்கு விஜய் ரசிகர்கள் உதவி

Monday, July 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி ஜெயப்பிரியா பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த கொடூர செயலை செய்த ராஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என நடிகர் நடிகைகள் உள்பட பலர் குரல் கொடுத்தனர். இதுகுறித்த ஹேஷ்டேக் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அறந்தாங்கியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமி ஜெயப்ரியாவின் குடும்பத்தாருக்கு புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் ரூபாய் 50,000 நிதி உதவி செய்துள்ளனர். விஜய் ரசிகர்களின் இந்த நிதியுதவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஜெயப்ரியாவின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் ரூ.5 லட்சம் வழங்குவதாக தமிழக முதல்வர் உத்தரவிட்டார் என்பதும், சிறுமி ஜெயபிரியா குடும்பத்திற்கு திமுகழகம் சார்பில் ரூ. 5 லட்சம் நிதியுதவி செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.