close
Choose your channels

’கத்துக்குட்டி’ படத்துக்கு விஜய்யின் மறைமுக பங்களிப்பு

Saturday, October 10, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் இரா.சரவணன் முதல் படத்திலேயே பரவலான கவனத்தை ஈர்த்துவிட்டார். பல தடைகளுக்குப் பிறகு நேற்று வெளியாகியிருக்கும் இவரது `கத்துக்குட்டி` ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றுவருகிறது.

காவிரி டெல்டா பகுதிகளில் வாழும் விவசாயிகளின் பிரச்சனைகள் மற்றும் மீத்தேன் எரிவாயுத் திட்டத்தால் டெல்டா பகுதிகளில் ஏற்பட இருக்கும் பாதிப்புகள் குறித்து விரிவாக விவரித்திருக்கிறது இந்தப் படத்தின் கதை. இப்படி ஒரு சீரியஸான கதையை தனது முதல் படமாக எடுக்கும் துணிச்சல் சரவணனுக்கு எப்படி வந்தது என்பதை நம்முடனான பிரத்யேகப் பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

“இந்தக் கதைதான் எனது முதல் படம் என்பதைத் தீர்மானித்துவிட்டேன், கடந்த ஆண்டு வெளியான கத்தி` படத்தின் வெற்றி எனது கதை மீதான நம்பிக்கையை அதிகரித்தது. `கத்தி` போன்ற விவசாயிகள் பிரச்சனைகளைப் பேசும் படத்தில் விஜய் போன்ற பெரிய நடிகர் நடித்தது மிகவும் பாராட்டத்தக்க விஷயம். அந்தப் படத்துக்குப் பின் டெல்டா பகுதிகளில் பெரிதும் விரும்பப்படும் நடிகராக உருவாகிவிட்டார் விஜய்.” என்றார்.

`கத்துக்குட்டி` படத்துக்கு மூத்த இயக்குனர் பாரதிராஜா, மதிமுக தலைவர் வைகோ ஆகியோர் நற்சான்றிதழ் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.