close
Choose your channels

பெரிய ஆட்களை எதிர்த்தால்தான் பெரிய ஆளாக வரமுடியும்: பேட்ட விழாவில் விஜய்சேதுபதி

Monday, December 10, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தின் இசை வெளியீடு நேற்று நடந்தபோது சில நிமிடங்கள் தாமதமாக விஜய்சேதுபதி வந்தார். அவர் வரும்போது ரஜினி உள்பட அனைவரும் எழுந்து நின்று அவரை வரவேற்றனர். இந்த விழாவில் அவர் பேசியதாவது:

'''பேட்ட' படத்தில் ரஜினி சாருடன் நடிப்பது என்பது நான் காணாத கனவு. இது நிஜமா என்று நினைத்துப் பார்த்துக் கொள்கிறேன். இது அவ்ளோ பெரிய விஷயம் எனக்கு.


''ரஜினி சார், எதுக்கெடுத்தாலும் ஆண்டவன் ஆண்டவன்னு மேலே கையைக் காண்பிப்பார். ஸ்கிரிப்டுக்குள்ளே ரஜினி சார் வந்து அழகா உக்கார்ந்துக்கறார். அவ்ளோ முழு ஈடுபாட்டோட என்கரேஜ் பண்ணி நடிச்சுக் கொடுக்கறாரு. என்னைப் பொறுத்தவரை, அந்த ஆண்டவனே ரஜினி சாரோட டெடிகேஷனைப் பாத்து வந்து, ரசிச்சு கைத்தட்டிட்டுப் போவான்.

ரஜினி சார், கேமராவுக்கு முன்னாடி நிக்கும் போது, நான் கேமராவுக்கு முன்னாடி நிக்கல. கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு முன்னாடி நிக்கிறதா நினைச்சுக்கறேன்னு சொன்னார். அவ்ளோ ரெஸ்பெக்டோட நடிக்கிறாரு. எனக்கும் இந்த ரெஸ்பான்ஸிபிலிட்டி வரணும்னு அந்த ஆண்டவனை வேண்டிக்கிறேன்.

ரஜினி சார் மாதிரி பேசச் சொல்லிக் கேக்கறீங்க. எனக்கு நடிக்கவே வராதுங்க. என்னை மாதிரிதான் எனக்கு நடிக்க வரும். கூத்துப்பட்டறைல சேரும் போது கூட, ரஜினி மாதிரி என்னால மிமிக்ரி பண்ணத் தெரியாதுன்னு சொன்னேன். நீ உன்னை மாதிரி நடி. அது போதும்னு சொன்னாங்க. அதனாலதான் இன்னிக்கு நடிகனா வந்து நிக்கிறேன்.

இந்த படத்துல த்ரிஷாவும் நடிச்சிருக்காங்க. ஏற்கெனவே 96 படம், ஞாபகத்துக்கு வருது. ரஜினி சார்… இது என் ஜானு சார்'' என்று விஜய்சேதுபதி கூறியபோது அரங்கமே அதிர்ந்தது

இந்தப் படத்துல நான் ரஜினி சாருக்கு நண்பனா, வில்லனான்னு கேக்கறீங்க. இவ்ளோ பெரிய சூப்பர் ஸ்டாருக்கு வில்லனா நடிச்சாத்தான் ஹிஸ்டரில நம்ம பேரும் இடம் பிடிக்கும். பெரிய ஆட்களை எதிர்த்தாதான் நம்மளும் பெரிய ஆளு ஆக முடியும். இந்தப் படத்தில் நான் வில்லன் தான்.

கார்த்திக் சுப்பராஜ், கமுக்கமான ஆளு. சைலன்ட்டாவே இருப்பாரு. ஆனா நிறைய சர்ப்ரைஸ்களை உள்ளுக்குள்ளே வைச்சிருக்கறவர். ஏதோ ஸ்கூல் படிக்கிற பையன்னு முதல்ல பாக்கும் போது நினைச்சேன். அப்புறம் பணக்கார வீட்டுப் புள்ள போல… படம் எடுக்க வந்திருக்குன்னு நினைச்சேன். ஆனா அவரோட திறமையை பாத்து வியந்து போனேன்.

இவ்வாறு விஜய்சேதுபதி கலகலப்பாக பேசினார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.