close
Choose your channels

நீதிமன்ற நடவடிக்கையால் 'கதகளி'யில் விஷால் செய்த திடீர் மாற்றம்

Friday, January 29, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த பொங்கல் தினத்தில் விஷால் நடிப்பில் பாண்டியராஜ் இயக்கிய 'கதகளி' திரைப்படம் ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் சர்ச்சைக்குரிய வசனம் இருப்பதாகவும் இந்த வசனங்கள் தங்கள் மனதை வருத்தப்பட செய்ததாகவும் ஒருசில குறிப்பிட்ட பிரிவினர்கள் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தபோது மனுவை விசாரணை செய்த நீதிபதி, இந்த வழக்கு சம்பந்தமாக மத்திய திரைப்பட தணிக்கை தலைமை அதிகாரி பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த மனுவில் குறிப்பிட்டிருந்த சர்ச்சைக்குரிய 20 நொடிகள் வசனத்தை தணிக்கை அதிகாரியின் ஒப்புதலுடன் விஷால் தானாகவே முன்வந்து நீக்கிவிட்டதாகவும், நேற்று முதல் இந்த வசனம் படத்தில் இடம்பெறவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த சர்ச்சைக்கு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.