close
Choose your channels

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா.. எந்த அரசு பெர்பெக்ட்? விஷாலின் ஆச்சரியமான பதில்!

Friday, December 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய மூன்று மாநில அரசுகளில் எந்த அரசு சிறப்பாக செயல்படுகிறது என்ற கேள்விக்கு விஷால் அளித்துள்ள பதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரைப்பட நடிகர்களில் ஒருவர் விஷால் என்பதும் அவர் நடித்த ’லத்தி’ திரைப்படம் வரும் 22 ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ’லத்தி’ படத்தின் புரமோஷன் பணிகளில் விஷால் ஈடுபட்டு வரும் நிலையில் ஊடகம் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்தார்.

அந்த பேட்டியில் தமிழ்நாடு கேரளா ஆந்திரா ஆகிய 3 மாநிலங்களில் எந்த மாநிலம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது என்று கேட்ட கேள்விக்கு அவர் சில நொடிகள் யோசித்து ’மோடி’ என்று பதில் கூறுகிறார்.அதாவது மத்திய அரசு சிறந்து விளங்குவதாக அவர் பதிலளித்துள்ளார். அவரது இந்த பதில் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

அதனை அடுத்து சினிமா, தொழில், அரசியல் ஆகிய மூன்றில் நீங்கள் ஒன்றை மட்டும் தேர்வு செய்வதாக இருந்தால் எதை தேர்வு செய்வீர்கள் என்று கேட்டதற்கு தற்போது சினிமாவில் இருக்கின்றேன் என்றும், அடுத்தது அரசியல் தான் என்று கூறியுள்ளார் விஷாலின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.