close
Choose your channels

முதலிடத்தில் யாஷிகா, கடைசி இடத்தில் ஐஸ்வர்யா! சிண்டுமூட்டும் பிக்பாஸ்

Thursday, September 20, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஆறுபேர் மட்டுமே இருப்பதால் இந்த ஆறு பேர்களை வைத்து ஒன்றரை மணி நேரம் நிகழ்ச்சியை ஓட்ட வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஆறு பேர்களுக்கு இடையே சிண்டுமுட்டும் வேலையில் பிக்பாஸ் இறங்கியுள்ளார்.

போட்டியாளர்களான ஆறு பேர்களில் ஒன்று, இரண்டு என ஆறு வரை போட்டியாளர்களுக்குள் பேசி வரிசைப்படுத்த வேண்டும் என்ற டாஸ்க்கை பிக்பாஸ் நேற்று கொடுத்துள்ளார். ஆறு பேர்களுமே முதலிடத்தை தான் விரும்புவார்கள் என்றும் யாரும் ஆறாவது இடத்தை விரும்ப மாட்டார்கள் என்று தெரிந்தும் பிக்பாஸ் இந்த டாஸ்க்கை கொடுத்துள்ளார்.

முதலிடத்திற்காக யாஷிகா, ஜனனி இடையே கடும் போட்டி நடந்தது. முதல் நாளில் இருந்து தான் அனைத்து டாஸ்க்கையும் முழு ஈடுபாட்டுடன் செய்து வருவதாக யாஷிகாவும், தன்னாலும் டாஸ்க்குகளை செய்ய முடியும் என்பதை கோல்டன் டிக்கெட் வாங்கி நிரூபித்ததாக ஜனனியும் வாதாடினர். பின்னர் மற்றவர்களின் கருத்திற்கேற்ப யாஷிகாவிற்கு முதலிடம் கிடைத்தது.

ஆனால் இரண்டாவது இடத்திற்கு கடும் போட்டி நடந்தது. ஜனனி, ரித்விகா, விஜி, ஆகியோர்களிடம் இரண்டாவது இடத்திற்காக ஐஸ்வர்யா கடுமையாக வாதாடினார். இறுதியில் தனக்கு இரண்டாவது இடம் கிடைக்காது என தெரிந்ததும் தான் ஆறாவது இடத்தை ஏற்றுக்கொள்வதாக ஐஸ்வர்யா கூறினார். ஒரு காரியத்தை சாதித்து கொள்ள ஒன்று கோபப்படுவது அல்லது அழுவது ஆகிய இரண்டு யுக்திகளை ஆரம்பம் முதலே பின்பற்றி வரும் ஐஸ்வர்யா இந்த டாஸ்க்கில் இரண்டையும் பயன்படுத்தினார்

இறுதியில் பல்வேறு பிரச்சனைகள், வாக்குவாதங்களுக்கு பின்னர் யாஷிகா, ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி, பாலாஜி மற்றும் கடைசி இடத்தில் ஐஸ்வர்யாவும் தேர்வு பெற்று அவர்களுக்குரிய இடத்தில் நின்றனர். இது அவர்களே நியமித்த தரவரிசை என்றாலும் மக்கள் முடிவு செய்துள்ள தரவரிசை எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.