close
Choose your channels

'விஜய் 59' படத்தில் இணைந்த 3-வது நாயகி

Thursday, July 9, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'புலி' படத்திற்கு பின்னர் விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படம் குறித்து தினந்தோறும் ஒவ்வொரு தகவல்களாக பரபரப்புடன் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த படத்தில் ஏற்கனவே விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமிஜாக்சன் ஆகியோர் நடித்து வரும் நிலையில், தற்போது இன்னொரு பிரபல நடிகையும் இந்த படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.


காதலில் விழுந்தேன், மாசிலாமணி, திருத்தணி, சமர் உள்பட பல படங்களில் நாயகியாக நடித்த நடிகை சுனைனா, விஜய் 59' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது. விஜய் நடித்த 'புலி' படத்திலும் இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தபோதிலும், மூன்றாவதாக திடீரென நந்திதா ஒப்பந்தம் செய்யப்பட்டது போல், இந்த படத்திலும் தற்போது மூன்றாவது நாயகி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் 'விஜய் 59' படத்தில் இடம்பெறும் ஆறு பாடல்களையும் ஜி.வி.பிரகாஷ் கம்போஸ் செய்து முடித்துவிட்டதாகவும், அந்த பாடல்களை வித்தியாசமாக, ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் வகையில் படமாக்குவது குறித்து அட்லி தனது உதவியாளர்களுடன் ஆலோசனை செய்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.